பக்கம்:எழிலோவியம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19



6

ண்டுகள் யாழை மீட்ட,
வரிக்குயில் பண்ணி சைக்க,
அண்டையில் கல்லில் பாயும்
அருவியின் முழவிக் கேற்பக்
கொண்டையைக் குலுக்கிச் சேவல்
குரலிசைத் தாளம் சேர்க்கக்
கொண்டல்சூழ் வான ரங்கில்
நீயாடும் கூத்தென் சொல்வேன்?

7


தாமரைப் பசுந்தட் டின்மேல்
உருள்கின்ற தண்ணீர் முத்தை
ஆம்! உன்றன் ஒளிக்கை நீட்டி
அம்பொன்னாய்ச் செய்தாய்; பூத்த
மாமரத் தளிரில், வாழை
மட்டையின் சரிவில் உன்றன்
துாமணி நிறத்தை ஏற்றிச்
சொக்கிடச் செய்திட் டாயே!

8


பொன்னொளி மழையைத் தோப்புப்
புதரெலாம் இறைத்தாய்; ஆங்கே
உன்னொளிக் காக ஏங்கும்
உயிர்க்கெலாம் ஊக்கம் சேர்த்தாய்;
செந்நெலைப் பொன்னெல் லாக்கிச்
சிறுபுல்லின் நுனிசி ரித்தாய்;
என்னென்பேன் ஒளியின் ஊற்றே!
நீஇன்றேல் உலகம் உண்டோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/20&oldid=1397927" இலிருந்து மீள்விக்கப்பட்டது