பக்கம்:எழிலோவியம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மலை

1

ஆடையோ பசுமைக் காடாம் !
அருவியோ எடுத்த மார்பிற்
சூடிய மாலை ! நாற்றந்
தோய்குழல் படியும் மேகம் !
ஈடிலாக் குறிஞ்சி கண்கள் !
இதழ்உச்சி அடைத்தே னாகும் !
தேடிய மலைப்பெண் ணாளின்
திருமுகம் பாராய் தம்பி !

2


கல்லெறிந் தோட்டுங் காவற்
கன்னியின் குரலைக் கேட்டுச்
செல்லாது கிளிகள் தங்கள்
இனமென்றே புனத்து மீளும் !
மெல்லியல் தொண்டை நோகத்
தினைப்புனம் வெறுக்கும்; சோரும் !
அல்லலை மலையே! கண்டும்
அசையாமல் இருக்கின் றாயே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/22&oldid=1301958" இலிருந்து மீள்விக்கப்பட்டது