பக்கம்:எழிலோவியம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23


6

    
 டிமலைக் குளத்தில் மூழ்கி
அல்லியைச் சிதைப்பாள் பார்த்துப்
'பிடி ! பிடி ' என்று வேலை
ஓங்கினான் வேடன் ! பின்னே
இடி இடி எனச்சி ரித்தே
குறமகள் ஒருத்தி அவ்வேல்
மடித்திட, மலையே! கண்டும்
வாய்மூடி இருக்கின் றாயே !

7


லைதவழ் கார்பார்த் தாளை
'மயில் ! மயில் !’ என்று கூவிச்
சிலையினை வளைத்தான் வேடன் !
தினைகுத்தும் வேட்டு வச்சி,
‘மலைநாட்டு மங்கை அந்த
'மயில் ! மயில் இல்லை! ' என்றாள்!
மலையே, கேள் ! உன்போல் வேடன்
மலையானான்! சிரித்தி டாயோ ?

8


 வான்தொடு மலையின் உச்சி
இரும்புச்சல் லடையைப் போன்ற
தேன்கூட்டைச் சிதைத்தான் வேடன்
கணுமூங்கிற் படியால் ஏறி !
வான்தவழ் மதியோ ? சொந்த
மனையாளின் முகமோ ? என்று
தேனடை கண்ட வேடன்
திகைத்திட்டான் ! தெளிவுண் டாக்கே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/24&oldid=1301967" இலிருந்து மீள்விக்கப்பட்டது