இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9
மக்கட்கே வானை என்றும்
மடக்கிநீ அனுப்பி வைத்தாய் !
மக்கட்கே ஓடை ஆறு
வற்றாத அருவி தந்தாய் !
இக்காலத் தமிழர் பண்டை
இயல்பினை மறந்தா ரென்ற
துக்கத்தால், மலையே ! ஒன்றும்
சொல்லாம லிருக்கின் றாயோ?
10
அரணாக இருந்து வள்ளல்
அரசரை வளர்த்தாய்! மற்றும்
அரணாகி எதிர்த்து வந்த
பகையினை அழித்தாய்! செத்த
அரணிலா மொழிமேல் ஆசை
தமிழர்கள் அடைந்த தாலே
அரணினை இழந்தார் என்ற
கவலையில் அழுந்தி னாயோ ?
__________