பக்கம்:எழிலோவியம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

க்கட்கே வானை என்றும்
மடக்கிநீ அனுப்பி வைத்தாய் !
மக்கட்கே ஓடை ஆறு
வற்றாத அருவி தந்தாய் !
இக்காலத் தமிழர் பண்டை
இயல்பினை மறந்தா ரென்ற
துக்கத்தால், மலையே ! ஒன்றும்
சொல்லாம லிருக்கின் றாயோ?

10


ரணாக இருந்து வள்ளல்
அரசரை வளர்த்தாய்! மற்றும்
அரணாகி எதிர்த்து வந்த
பகையினை அழித்தாய்! செத்த
அரணிலா மொழிமேல் ஆசை
தமிழர்கள் அடைந்த தாலே
அரணினை இழந்தார் என்ற
கவலையில் அழுந்தி னாயோ ?

__________

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/25&oldid=1301971" இலிருந்து மீள்விக்கப்பட்டது