பக்கம்:எழிலோவியம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காடு

1

குளத்தினைத் தாண்டி மேற்கில்
கூப்பிடு தொலைவி லுள்ள
களத்தினைக் கண்டேன்; அங்கும்
அமைதியைக் கண்டேன் இல்லை !
வளத்தினைப் பெருக்கும் குன்று
மலைச்சார லருகில் என்றன்
உளத்தினைக் கவர்ந்த காட்டைக்
கண்டேன்நான் ! உவகை கொண்டேன் !

2

முட்புதர் நெருஞ்சி; கள்ளி
முன்னரண் ஒற்றைப் பாட்டை
உட்புகும் வாயில்; தூண்கள்
உயர்மரம்; அதனில் தோன்றும்
கொத்துப்பூ காற்றி லாடும்
கொடிகளாம்; வெய்யோன் திங்கள்
உட்புக வொண்ணாத் தூய
மரகதக் கோட்டை காடே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/30&oldid=1296204" இலிருந்து மீள்விக்கப்பட்டது