பக்கம்:எழிலோவியம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

6

பொன்மணிக் கோவை கொன்றைப்
பூங்கொத்தாம் ! அக்கொத் தின்கீழ்
முன்னீண்டு தொங்கும் காய்கள்
குரங்கின்வால் ! குமட்டி முன்னர்
பொன்செய்யும் கொல்லன் ஊதாங்
குழலெனில் பொருந்தும் ! காட்டுப்
பன்மலர் மொய்க்கும் வண்டோ
கருநாவற் பழமே தம்பி !

7


ழையெலாம் உதிர்த்த மொட்டைத்
தனிமரம் அருகில் என்னை
அழைத்தது; சென்றேன் : "சிற்றுார்,
அணிநகர், மாடம், கூடம்
தழைத்திடச் செய்தோம் செத்தும் !
தடங்கடல், காற்றெ திர்த்தோம் !
'உழைப்பவர்க் குயர்வேன் இல்லை ?"
என்றதே ! விழிப்புத் தேவை !

8


ணுமூங்கில் குருத்துப் போர்வை
காதுகள் உயர்த்தி ஆண்மான்
பிணையுடல் தேய்க்கும்! நீண்ட
பெரும்புற்றைக் கரடி தோண்டும் !
நுணலினை நுகர்ந்த பாம்பு
பாறைமேல் புரளும் எங்கும் !
இணையிலா அழகின் தேக்கம்
இன்றமிழ் அழகுக் காடே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/32&oldid=1397925" இலிருந்து மீள்விக்கப்பட்டது