பக்கம்:எழிலோவியம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

3

க்கரை உலகிற் கேக
அமைந்தநீள் பாட்டை தானோ?
மிக்கவே விரிந்த நீலப்
பாலையோ ? பவளம் முத்தை
ஒக்கவே நிறைத்து வைத்த
ஒளிபுனல் காவற் காடோ ?
எக்களித் துயர்ந்து பாயும்
அலைதமிழ் இசையோ ? தம்பி !

4


ழிப்பறி கள்வன் போல
நாவாயில் வந்த மக்கள்
கழிபொருள்,கடலே யாவும்
பறித்தனை!சில்லோர் வாழ
வழியினை விட்டுப் பண்ட
மாற்றினை வளர்த்தாய்! சீறி
அழித்தாலும் அழிப்பாய்! இன்பம்
அளித்தாலும் அளிப்பாய் போலும் !

5


தொடுவானும் கடலும் ஒன்றித்
தோளோடு தோளைப் பின்னும் !
நெருப்பினில் உருகும் பொன்னாம்
நிமிர்இளம் பரிதி ! கொல்லன்
அடுப்பாகும் கடலின் மட்டம் !
அலையெலாம் ஒளிப்பி ழம்பாம் !
படிப்படி வானம் காட்டும்
பகட்டுக்கோர் அளவே இல்லை !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/35&oldid=1301952" இலிருந்து மீள்விக்கப்பட்டது