பக்கம்:எழிலோவியம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

6

நாட்டினை ஓம்பு கின்றாய் !
கோடையால் நலியும் மக்கள்
கேட்டினை நீக்கு கின்றாய் !
கிளைபொருள் உள்ளாய்! முத்துக்
கோட்டையைப் பவழக் காட்டைக்
கொண்டுள்ளாய் ! எனினும், உன்றன்
வாட்டந்தான் யாதோ? இன்னும்
உறங்காமல் அலைகின் றாயே!
       

7


லைக்கைகள் வளையைப் போக்க
ஆழ்கண்ணீர் முத்தம் சிந்தத்
தலைவிரி கோல மாகத்
தடங்கரை புரளு கின்றாய் !
உலைஎறி காற்றைப் போல
உயிர்க்கின்றாய்! இன்ப வாழ்வை
அலைத்தவர் உண்டோ? காதல்
அறிவையோ? கடற்பெண் ணாளே !

8


ண்டொத்த கழிநீ லத்தை
மலர்க்கையி லேந்தி வந்து,
வண்டலம் பாவை சூட்டி
மணற்பரப் போடி யாடும்
நண்டுகள், நெய்தல் தந்த
நல்லரு மடச்சி றார்கள்
கண்டுமா உனது நெஞ்சின்
கடுந்துயர் நீங்க வில்லை ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/36&oldid=1301872" இலிருந்து மீள்விக்கப்பட்டது