பக்கம்:எழிலோவியம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



36


9

ரவுபார்த் திருந்து கேள்வன்
வரவில்லை என்றால் பெண்கள்
உருகுவார்; சோர்வார்; ஏதோ
உறுமுவார் உள்ளுக் குள்ளே;
பிரிவினை விழிநீர் காட்டப்
பேசிடார் ! ஆனால், நீயோ
கரையினில் அலைக்கை நீட்டிக்
கலகங்கள் செய்கின் றாயே !

10


ங்கையின் பற்கள் போன்ற
மணற்கரைப் புன்னை மொட்டு
சங்கீன்ற முத்த மோடு
கலந்திடும்¡ கிளையில் காக்கை
எங்குமே காணா இன்பம்
உன்னிலை தருத லாலே
கங்குலில் உறங்கும் ! உன்றன்
கண்களேன் உறங்க வில்லை ?

----: :----

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/37&oldid=1301997" இலிருந்து மீள்விக்கப்பட்டது