பக்கம்:எழிலோவியம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சேரி

1

யலினைச் சுற்றிப் பார்த்துத்
திரும்பினேன்; வளைந்த வாய்க்கால்
அயலுள்ள சேரி மட்டும்
அழைத்துவந் தென்னை விட்டுப்
பெயல்தங்கும் ஏரி நோக்கிப்
பிரிந்தது; சேரி கண்டேன் !
அயலவர்க் குழைத்துத் தேய்ந்த
அருந்தமிழ் மக்கள் கண்டேன் !

2


நாட்டினைக், கலையை, நாட்டு
மக்களை, அரசை, வாழ்வை,
ஊட்டியே வளர்க்கும் தோளை,
உழைப்பினைக் கண்டேன் ! அன்னோர்
பாட்டினால் கொழுக்கும் செல்வர்
கடுகுள்ளப் பண்பைச் சேரி
காட்டிற்று ! குடிசைப் பொத்தல்
காட்டிற்றே அரசீ னத்தை !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/38&oldid=1301849" இலிருந்து மீள்விக்கப்பட்டது