பக்கம்:எழிலோவியம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



38


3

டுகள் சாந்த ரைக்க
ஒருபுறம் கிடக்கும் ! வார
ஆடுகள் வேலி யோரம்
அசைபோடும்; மேயும் ! நத்தை
ஓடுகள் கும்ப லாக
ஒருபுறம் கிடக்கும் ! வேறு
தேடுதற் குணவு முண்டோ
பணக்காரத் திருடர் நாட்டில் ?

4


டிந்துபா ழான கோயில்
இருக்கின்ற சிலைகள் போல
இடிசுவர் மருங்கில் ஓர்சேய்
தூங்கிடும்; இருக்கும் ஒன்று;
மடிபிடித் திழுக்கும் ஒன்று;
வயிற்றினைக் காட்டும் ஒன்று;
கொடுஎனக் கேட்டுத் தாயின்
குற்றுயிர் வாங்கும் ஒன்றே !

5


செல்லுண்டு மழையும் காற்றும்
சேர்ந்துண்ட குடிசை முன்னர்
புல்லுண்ட வயலைப் பார்க்கப்
போனானின் உணவுக் காக
எல்லுண்ட இரால்போல் நீண்ட
இருகையால் உலக்கை பற்றிச்
செல்லுண்ட நிலாமு கத்தாள்
நெல்குத்தும் செம்மை பாரீர் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/39&oldid=1301999" இலிருந்து மீள்விக்கப்பட்டது