பக்கம்:எழிலோவியம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

9

டுவெயில்,கார்வான் சூழ்ந்த
நள்ளிருள், தூறல், காற்றுப்
படுவெயில் எனப்பா ராது
மற்றவர் பயனுக் காக
இடுவெயில் போலு ழைக்கும்
சேரிவாழ் ஏழை மக்கள்
கொடுவெயில் குளிர்ம ழைக்குக்
குந்திடக் குடிசை உண்டோ ?

10


ணவினைத் திருடி உண்டோர்
உயர்ந்தனர் தமிழ கத்தில் !
உணவினை விளைப்போர்க்
கெல்லாம்
உணவிலை; உயர்வேன் இல்லே?
உணவன்றோ உயர்வு தாழ்வின்
ஆணிவேர்?ஏய்ப்போர் வாழ்ந்தார்!
உணவினைஉழைப்பை யார்க்கும்
பொதுவாக்க உயரும் வாழ்வே !

--------

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/41&oldid=1302581" இலிருந்து மீள்விக்கப்பட்டது