இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நிலா
1
இடையிடை முத்துத் தைத்த
இருளாடை போர்த்த வானைக்
கடைக்கணித் திருக்குஞ் சின்ன
அரிவாளைக் கண்டேன் மேற்கில்!
நடந்துவா தம்பி என்று
பிறைமதி அழைக்க, நைந்தே
ஒடுங்கிய எனது நெஞ்சம்
விழிக்காலால் நகர்ந்த தாங்கே !
2
அரிவாளே, அரிவை யாளின்
அழகிய நெற்றி ! ஓங்கு
கரியானைக் கோடு, வீரன்
கைப்படும் உடைவாள், மெல்ல
உருமாறி மங்கை நல்லாள்
ஒளிமுக மாயிற்(று) ! இந்தத்
திருவெலாம் அறிஞர் கண்டே
திங்கள்என் றுரைத்தார் போலும் !