பக்கம்:எழிலோவியம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
43
6

டற்பெண்ணைப் பிரிந்து செல்லும்
கவலையோ? கண்வி ழித்து
நடந்ததால் உற்ற சோர்வோ ?
நற்றமிழ் மங்கை வீட்டுக்
கடைதிறப் பொலியைக் கேட்ட
கலக்கமோ ? வேற்று நாட்டை
அடைகின்ற நெஞ்சில் உற்ற
அதிர்ச்சியோ ? நிலவே ! சொல்வாய் !

7

வானிடை ஒளிப்பி ழம்பின்
வட்டமோ ? வெள்ளித் தட்டோ ?
பானைமோர் மிதக்கும் வெண்ணெய்ப்
பற்றலோ ? சிறுவர் பந்தோ ?
மானமே உயிராய் வாழ்ந்த
வீரர்கைப் பரிசை தானோ ?
தேனடை நிலவே ! உன்னை
வேறென்ன செப்பு வாரே ?

8

திங்களில் ஒருநா ளுன்றன்
திருமுகம் சிரிக்கும் ! மற்றும்
தங்கிய நாட்கள் தோறும்
தண்முகம் அளவில் தேயும் !
இங்குளார் அடையும் இன்ப
துன்பத்தை எடுத்துக் காட்டும்
மங்காத அறநூ லானாய்!
மாசற்ற மணியே ! வாழி !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/44&oldid=1301804" இலிருந்து மீள்விக்கப்பட்டது