பக்கம்:எழிலோவியம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

9

முகத்தினை மறைத்து வெள்ளை
முக்காடிட் டசைந்து மக்கள்
அகத்தினைக் கடைக்கண் நோக்கால்
பறித்திடும் அரிவை போல்நீ
முகத்திரை பூண்டிட் டாலும்
உன்முகம் இன்ப மூட்டும் !
அகத்துயர் நீக்கி நீங்கா
அழகிய நிலவே ! வாழி !

10


முத்தொளி வீசும் நல்ல
முழுநிலா அமுதே! நாளும்
கத்திடுங் கடலும் வானும்
கட்டியங் கூறும் ! நாட்டில்
எத்துணைக் காத லர்க்கோ
இன்பொடு துன்பம் தந்தாய் !
பத்தைந்து நாளில் மக்கள்
உன்கூத்தும் பார்க்கின் றாரே !

_________

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/45&oldid=1301802" இலிருந்து மீள்விக்கப்பட்டது