இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பூந்தொட்டி
1
கண்ணமு தளிப்பாள்; இல்லாக்
கவலையை மனைவி தீர்ப்பாள்;
மண்ணினைப் பிசைந்து வாரித்
திகிரியில் வைத்துச் சுற்றிப்
பண்ணிசைத் திடுவான் சட்டி
பானைசெய் தொழிலான்; அன்னோன்
எண்ணத்தில் அரும்பி, தொட்டி
எழுச்சியில் தோன்றும் தொட்டி !
2
வளர்ந்தனை வானில் ஊறும்
பரிதியின் ஒளியை மாந்தி !
வளமிலா மூசைத் தங்கம்
வாடிப்பின் ஒளிர்தல் போல
இளமையைத் தாண்டிக் காளை
எழில்பெற்றாய் தீயில் மூழ்கி !
களத்திடை வந்தாய்! மக்கள்
கண்களைப் பறித்தாய்! வாழி !
4