பக்கம்:எழிலோவியம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூந்தொட்டி

1

ண்ணமு தளிப்பாள்; இல்லாக்
கவலையை மனைவி தீர்ப்பாள்;
மண்ணினைப் பிசைந்து வாரித்
திகிரியில் வைத்துச் சுற்றிப்
பண்ணிசைத் திடுவான் சட்டி
பானைசெய் தொழிலான்; அன்னோன்
எண்ணத்தில் அரும்பி, தொட்டி
எழுச்சியில் தோன்றும் தொட்டி !

2


ளர்ந்தனை வானில் ஊறும்
பரிதியின் ஒளியை மாந்தி !
வளமிலா மூசைத் தங்கம்
வாடிப்பின் ஒளிர்தல் போல
இளமையைத் தாண்டிக் காளை
எழில்பெற்றாய் தீயில் மூழ்கி !
களத்திடை வந்தாய்! மக்கள்
கண்களைப் பறித்தாய்! வாழி !

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/50&oldid=1299722" இலிருந்து மீள்விக்கப்பட்டது