பக்கம்:எழிலோவியம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



51

6

தொட்டியில் வார்த்த நீரோ
மழைக்குப்பின் துரும்பு சிந்தும்
சொட்டுக்கள் போலே சொட்டித்
தொலைந்தது ! மக்கட் கின்பம்
கொட்டிய தொட்டி ஓட்டை!
அதன்குறை உணர்வார் யாரே ?
தொட்டுப்பார்க் காதே தம்பி!
சுக்குநூ றாகிப் போமே !

7


ட்டிலா மணத்தை வாரி
மக்களுக் களித்த முல்லை,
கட்டெது மின்றித் தென்றற்
காற்றொடு கலந்த முல்லை
பட்டதே! இலைகள் எல்லாம்
பழுத்ததே! தொட்டி ஓட்டை !
தொட்டுப்பார்க் காதே தம்பி !
சுக்குநூ றாகிப் போமே !

8


ன்னியர் மனத்தை, வண்டுக்
கண்களைக் கவர்ந்த தொட்டி,
மின்னிடைப் பெண்கள் சூட
மிகுமலர் தந்த தொட்டி,
தன்னிலை, அந்தோ ! ஓட்டை !
தொட்டுப்பார்க் காதே தம்பி !
உன்விரல் பட்டால் சுக்கு
நூறாகி உடைந்து போமே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/52&oldid=1299283" இலிருந்து மீள்விக்கப்பட்டது