பக்கம்:எழிலோவியம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



59

6

பெருவாரி யான மக்கள்
பேச்சினில் இச்சை கொள்வாள் !
தெருவார்க்கும் திகைப்பை யூட்டிச்
சிரித்தோடி ஆடி நிற்பாள் !
உருவாகும் சிற்பம், வண்ணம்
நிறைவுறாப் பெதும்பை ! நாட்டின்
வருங்கால வாழ்வுப் பாதை
வழிகாட்டப் பார்க்கின் றாளே !

7


ண்ணத்தில் ஆசை தோன்ற,
இதழினில் துடிப்புப் பாயப்,
பெண்மையின் அழகை மேனி
பெற்றிட்ட பெதும்பை நாளை
எண்ணுவாள் கிழவி ! பற்கள்
இல்லாத வாயைக் காட்டிப்
பண்பாடிச் சிரிக்கும் சொந்தப்
பேரரைப் பார்ப்பாள் அந்தோ !

8


மங்கை


ந்தியில் வானம் காட்டும்
அழகுபோல், தன்னைக் காண்போர்
புந்தியை மயக்கும் இன்பப்
புதுமையாள் ! வாட்கை வீரர்
சிந்தையை அரிக்கும் நோயைத்
தீர்த்திடும் விழியாள் ! இன்பம்
சிந்திடும் நிலவே மங்கை
சிரிப்பாகும் ! பற்கள் முத்தே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/60&oldid=1301725" இலிருந்து மீள்விக்கப்பட்டது