இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
68
9
வாழ்வினில் இன்ப துன்பம்
மலிந்திட்ட போதும் மேலோர்
தாழ்ந்திடார்; கடமை ஒன்றே
தலையெனச் செய்வார் ! நீயும்
சூழ்ந்திடும் நன்மை தீமை
தன்னிலே தோய்ந்து நாளும்
வாழ்ந்தனை ! உனது போக்கை
மக்களேன் நினைப்ப தில்லை ?
10
வண்டினம் போலத் தத்தம்
மகிழ்வொன்றே கருதும் மக்கள்
சண்டைக்கு வந்திட் டாலும்
தயங்கிடேன்; எழுது வேன்நான் !
அண்டையர் தம்போல் இன்பம்
அடைந்திட உலகை மாற்றாச்
சண்டிகள் அழிய வேண்டும் !
தமிழ்நாடு தழைக்கும் அன்றே !
-------