பக்கம்:எழில் உதயம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தியானந்தம் 93;

அழிக்க எம்பிராட்டி மேற்கொண்ட கோலங்கள். குழந்தை களாகிய அன்பர்களுக்கு எப்போதும் அவள் இனியவளா கவே இருப்பாள். -

நாம் தேவியினுடைய குழந்தைகள் என்ற நினைவும், அதன் விளைவாக அவளிடத்தில் பேரன்பும் உண்டாளுல் நிச்சயம் பிராட்டியின் அருள் நமக்கு கிடைக்கும். நாம் தூய மனமுள்ள குழந்தைபோல ஆக ஆக அன்னை நம்மை அணுகி வந்து அருளுவாள். அலுவலகம் போகும் பையன், பள்ளிக்கூடம் செல்லும் மகன், நடைபோடும் இளஞ்சேய், கைக்குழந்தை ஆகியவரிடத்துத் தாய்க்கு அன்பு இருப்பது இயல்பு. ஆனல் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு வகையில் அன்னை தன் அன்பைக் காட்டுகிருள் பெரிய மகனைத் தீண்டாமல் அவன் நலங்களைக் கவனிக்கிருள். பள்ளிக்கூடம் செல்லும் மகனேக் குளிப்பாட்டிச் சட்டை போட்டுவிடுகிருள். நடக்கத் தெரிந்த இளங் குழந்தையை விளையாட விட்டுவிடுகிருள். கைக் குழந்தையை எப்போதும் அருகிலே வைத்திருக்கிருள்; எங்காவது போனுல் எடுத்துக் கொண்டு போகிருள். - .

உலகியலில் நாம் வளர வளர அன்னையின் அணப்பிலிருந்து விலகிக் கொண்டே வருகிருேம். ஆளுல் அருளியலில் நாம் வரவரச் சிறு குழந்தையாக வேண்டும். வர வர அன்னையை அணுகி அவள் இடுப்பில் ஏறும் குழந்தையாகிவிட வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு கணமும் அப் பெருமாட்டி நம்மைக் கவனிப் பாள். நமக்கென்று ஒரு செயலும் இல்லாமல் இழந்து, 'அம்மா! எல்லாம் உன் செயல்” என்று இளங் குழந்தை. யாகிவிட்டால், நமக்காக அம்மாவுக்குப் பசிக்கும்; நமக்காக அம்மா நடப்பாள்; நமக்காக அம்மா மருந்துஉண்டாள்; நமக்காக அம்மா படுத்துக்கொள்வாள்; நமக்காக அம்மா விளையாடுவாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/101&oldid=546258" இலிருந்து மீள்விக்கப்பட்டது