பக்கம்:எழில் உதயம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 எழில் உதயம்

அம்பிகை கருணையினல் உலகத்தவருக்கு அருள அவதாரம் செய்ததையும் உமா என்ற திருநாமம் காட்டு , கிறது. அவள் பல திருவவதாரங்களை எடுத்திருக்கிருள். கண்ணகை அவதரித்தவளும் அவளே என்று தேவி பாகவதம் கூறும், எந்தி எந்தக் காலத்தில் எப்படி எப்படி அவதாரம் செய்ய வேண்டுமோ அப்படி அப்படி அவதரிப்பவள் தேவி. பார்வதியாக எழுந்தருளியது அந்த அவதாரங்கள் பலவற்றில் ஒன்று; பலராலும் போற்றப் பெறும் திருக்கோலம் அது.

இமயத்து அன்றும் பிறந்தவளே!

இமயத்திலே தோற்றியதையே பிறந்தவளே என்பதில் குறிப்பித்தார். தோற்றமுடைய பொருள்களுக்கு அழி வுண்டு. ஆகவே இவளுக்கும் அழிவுண்டோ என்று அறியாத வர்கள் ஐயுற இடங்கொடுத்து விட்டோமே!’ என்று , எண்ணினர்; உடனே, -

அழியா முத்தி ஆனந்தமே!

என்கிரு.ர்.

முக்தி என்பது விடுதலே என்ற பொருளுடையது. பாசபந்தங்களினின்றும், மாயையினின்றும், பிறப்பு இறப்பு களினின்றும் விடுதலை பெறுவதே முக்தி, அது ஆனந்த மயமானது. அதைப் பேரானந்தம், பிரம்மானந்தம், சிவானந்தம், ஆத்மானந்தம், ஆனந்தம் என்று அடை கொடுத்தும் அடையின்றியும் சொல்வார்கள். .

இன்பம், துன்பம் என்ற இரண்டையும் நாம் நுகர் கிருேம். இன்பம் என்பது ஒளியானல் துன்பம் என்பது நிழலாகும். முத்தியின்பம் என்பது இந்த இரண்டில் ஒன்ருன இன்பம் அன்று. சுகதுக்கங்களுக்கு அப்பாற். பட்ட ஆனந்தம் அது. இந்திரியங்களின் வாயிலாக நாம் நுகருவதையே இன்பம் என்றும். துன்பம் என்றும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/110&oldid=546267" இலிருந்து மீள்விக்கப்பட்டது