பக்கம்:எழில் உதயம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 எழில் உதயம்

வரிகள் உணர்த்துகின்றன. அவளே முக்கரணத்தாலும் வழி பட்டு வாழ்வது அடியார்களின் கடமை.

கின்றும் இருந்தும் கிடந்தும்

நடந்தும் நினைப்பது உன்னை;

என்றும் வணங்குவது உன்மலர்த் தாள்; எழு தாமறையின்

ஒன்றும் அரும்பொரு ளே, அரு

ளே, உமை யே,இமயத்து

அன்றும் பிறந்தவ ளே,அழி

யாமுத்தி ஆனந்தமே!

(எழுதாமல் கேட்கப் படுகின்ற வேதத்தில் பொருந்தும் அரிய பொருளாக உள்ளவளே, அருளே வடிவாக உள்ளாய், அன்று இமாசலத்தில் பார்வதியாகத் திருவவதாரம் செய் தாய், அழியாத மோட்ச ஆனந்தமாக உள்ளவளே, அடியேன் நின்றபடியும் இருந்தபடியும் படுத்தபடியும் நடந்தபடியும் தியானம் செய்வது உன்னையே. என்றைக்கும் தலைதாழ்த்து வணங்குவது உன் திருவடித் தாமரையையே.1

இருத்தல்-உட்கார்தல், உன்னையே என்ற ஏகாரம் தொக்கது. அன்றும்; உம்மை, அசைநிலை. முன்னும் பின்னும் பல அவதாரங்கள் எடுத்ததுபோல அன்றும் அவதரித்தாய் என்று எச்ச உம்மையாகக் கொள்வதும் ஒன்று. அன்று: பண்டறி சுட்டு.)

- அபிராமி அந்தாதியில் 10-ஆவது பாடல். இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/112&oldid=546269" இலிருந்து மீள்விக்கப்பட்டது