பக்கம்:எழில் உதயம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரளுரவிந்தம் 107°

அமரர்கள் இறந்து கொண்டிருந்தார்கள், அமுதம் உண்ட பிறகு தமக்குரிய ஆயுள் முழுவதும் வாழ்ந்தார்கள். அந்த ஆயுட்காலம் முடிந்தால் அவர்களும் இறந்தார்கள். 'நூறு கேர்டி பிரமர்கள் துங்கினர்' என்பது தேவாரம். இந்திர பதவியில் ஒரே இந்திரன்தான் இருக் கிருன் என்பது இல்லை. எத்தனையோ இந்திரர்கள் வந்து வந்து போளுர்கள். பிரமர்களும் பலர் வந்து போளுர்கள். அவர்களுக்கும் மரணம் உண்டு. சிவபெருமான் ஒருவனே மரணம் இல்லாமல் கால காலனுக இருக்கிருன்.

அமுதம் கடைந்தபோது ஆலகால நஞ்சு வந்தது. அதை உலவவிட்டிருந்தால் அமுதை உண்பதற்கு முன்பே தேவர்கள் அழிந்திருப்பார்கள், தேவர்களின் ஒலத்தைக் கேட்டு இரங்கிய சிவபெருமான் அந்த நஞ்சை உண்டு. அவர்களைக் காப்பாற்றினன்.

நஞ்சை யுண்ட திருவிளையாடலேச் சிவபெருமான் செய்தாலும் அம்மையே அதனை உண்டாள் என்றும் சொல்வது உண்டு. சிவபெருமானுக்கும் சக்திக்கும் வேறுபாடு இல்லாமையால் அவ்வாறு சொல்கிருர்கள். சில்ப்பதிகாரத்தில் பாலைநிலத்தில் உள்ள வேடுவர்கள் கொற்றவையை வழிபடுகிறர்கள் என்ற செய்தி வரு கிறது. அவர்கள் தேவியைப் பாடுகிரு.ர்கள். வேட்டுவ வரி என்ற பகுதியில் அப்பாடல்கள் உள்ளன. அங்கே அம்மை நஞ்சுண்ட செய்தியை அழகாக அமைக்கிருர் இளங்கோவடிகள். தேவர்கள் சாவாமையைத் தரும் என்று எண்ணி அமுதம் உண்டார்கள். அப்படி உண்டும் அவர்கள் இறந்து போகிரு.ர்கள். ஆனல் அவர்கள் அஞ்சி நடுங்கிய நஞ்சைத் தான் உண்டு அழிவின்றி விளங்கு வதோடு, இறந்தும் பிறந்தும் வரும் அமரர்களுக்குத் திருவருள் பாலிக்கிருளாம் அம்பிகை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/115&oldid=546272" இலிருந்து மீள்விக்கப்பட்டது