பக்கம்:எழில் உதயம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னையின் தண்ணளி

தம்முடைய நிலையை மறந்து கீழ்நிலையில் உள்ளவர் களுக்கு உதவி புரிபவர்களைப் பெருங்கருணையாளர் என்று உலகம் பாராட்டும். பெரிய பணக்காரர் ஒருவர் ஏழை ஒருவன் வீட்டுக் கல்யாணம் விசாரிக்க வருகிருர், அப்போது அவருக்கு எல்லாருமே உபசாரம் செய்யத் தலைப்படுவார்கள். அது வரையிலும் மாப்பிள்ளையையும் சம்பந்திகளையும் கவனித்துக் கொண்டு வந்த பெண்ணின் தகப்பனர் வந்த

ெேசல்வரைக் கவனித்துக் கைகட்டி நிற்பார். சம்பந்திகள்கூட

அவருக்கு மரியாதை செய்வார்கள். வந்த செல்வர் தாம்பூலம் வாங்கிக்கொண்டு போய் விடுவார். பிறகு வீட்டில் உள்ளவர்கள் யாவரும் அந்தப் பெரிய மனிதர் வந்து விட்டுப் போனதைப் பெருமையாகச் சொல்லிக் க்ொள்வார்கள். கல்யாணம் ஆகிப் பல நாட்களான பிறகும், அந்தக் கல்யாணத்தைப் பற்றிய பேச்சு வரும்போதெல் லாம், “அந்தக் கல்யாணத்துக்கு அவர்கூட வந்திருந்தார்: என்று செல்வர் வந்த நிகழ்ச்சியைச் சொல்வார்கள். பணக்காரர் ஏழை வீட்டுக்கு வராதவர் என்பது எல்லோரும் உறுதி செய்துவிட்ட உண்மை. அதை மாற்றி அவர் வந்துவிட்டார். இது பெருவியப்பு அல்லவா? மேலே போனவன் கீழே இறங்கி வந்த பெருங்கருணையல்லவா?

இந்தச் சிறிய நிகழ்ச்சிக்கே உலகம் இந்தப் பாடு பட்டால் மிகப் பெரியவர்கள் ஏழைகளுக்கு எளியராக வந்து ஏதேனும் செய்தால் அதைக் கதையாக்கி வரலாருக்கி லட்சியமாக்கிப் போற்றுவதில் ஆச்சரியம் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/139&oldid=546295" இலிருந்து மீள்விக்கப்பட்டது