பக்கம்:எழில் உதயம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னேயின் தண்ணகி 133

பாகப் புலப்படும்படி அபிராமிபட்டர் எடுத்துக்காட்டு திரு.ர். அவளுடைய அருமைப் பாட்டைச் சொல்லிப்

பின்பு எளிமையைச் சொல்கிரு.ர். அப்போது அந்த

எளிமையின் சிறப்பு நன்ருகத் தெரிகிறது.

அவளுடைய உயர்வு எத்தகையது?

எம்பிராட்டியின் அரண்மனையை நோக்கிப் போக லாம், வாருங்கள். எந்தச் சக்கரவர்த்திக்கும் இல்லாத பெரிய அரண்மனையில் வாழ்கிறவள் அவள். இராஜ ராஜேசுவரி அல்லவா? அந்த அரண்மனையில் எளிதிலே நுழைந்துவிட முடியாது. கட்டுக் காவல் காரணம் அல்ல; அத்தனை கூட்டம். அவளுடைய ஆணைக்கு அடங்கி, அவளுடைய கட்டளையை எதிர்பார்த்து, தேவாதி தேவர் கள் நிற்கிருர்கள். நெடுந்துாரத்தில் வரும்போதே நிலத்தில் 'திருமேனி படிய வணங்கி எழுகிருர்கள். இடுப்பிலே வேட்டியைக் கட்டிக் கைகளைக் கட்டியபடியே நிற்கிருர் கள்.

யார் யார் இப்படி நிற்கிருர்கள்? அதோ இந்திரன்; இதோ வருணன், இவன்தான் அக்கினி, இவன் வாயு, இந்தக் குரூபிதான் குபேரன். அட. சூரியன்கூடத் துாண் ஒரத்தில் ஒதுங்கி நிற்கிருனே! யார் வந்திருக்கிருர்கள் என்று பார்த்துச் சொல்வதைவிட யார் வரவில்லையென்று சொல்வது எளிது. முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்திருக்கிருர்கள். அவ்வளவு பேரும் ஒருவர் பின் ஒருவ ராக அம்பிகையை வணங்கிக் கொண்டே இருக்கிருர்கள்.

வந்திப்பவர் உன்னை வானவர்.

தேவர்கள் மாத்திரமா? அதோ அசுரர்கள்கூட வணங்குகிருர்களே! தேவர்களின் பகைவர்கள் அல்லவா அவர்கள்? x . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/141&oldid=546297" இலிருந்து மீள்விக்கப்பட்டது