பக்கம்:எழில் உதயம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று செல்வம் 151

அம்பிகை பச்சை நிறமுடையவளாகவும் சில சமயங் களில் இருக்கிருள், அவளுடைய இனிய சொல் கிளி மொழியைப் போல இருக்கிறது. ஆதலின் பைங்கிளியே!” என்று விளிக்கிரு.ர். ஓங்காரமென்னும் கூட்டில் உலாவும் கிளி' என்று பிறரும் சொல்லியிருக்கிரு.ர்கள். இந்தக் கிளிக்குப் பேச்சு, பாட்டு என்று வேறு வேருகக் குரல் இல்லை. பேசிளுலே அது பாட்டுப் போல இனிமையாக இருக்கும். கலைமகளின் கீதத்தைக் கேட்டு, 'நன்ருக இருக் கிறது” என்று சொன்ன அம்பிகையின் வாய்மொழி தன் வீணையின் இன்னெலியினும் இனிமை பொழிவதைக் கண்டு நாணி அந்த வானி தன் வீணையை உறையிலிடுவாள் அன்ருே? அம்மையின் குரல் பண்ணைப் போல் இருக்கும். அவள் சொல் பண் அளிக்கும் சொல்.’

அவளுடைய திருமேனி ஞானமணம் வீசுவது. அவள் பரிமளம் வீசும் திருமேனியுடையவள். 'திவ்ய கந்தாட்யா' (லலிதா சகசிர காமம், 631) என்பது அவளுடைய திருநாமங் களில் ஒன்று. பண்ணளிக்கும் சொல்லையும் பரிமளத் திரு மேனியையும் உடைய பெருமாட்டியைச் சியாமளா என்னும் திருநாமத்தால் அழைப்பதும் உண்டு. காளிதாஸ் மகாகவி சியாமளா தண்டகம் என்று ஒரு துதி நூல் பாடியிருக்கிரு.ர். சியாமளே என்பது தமிழில் யாமளே என்று வரும்.

பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப்

பைங்கிளியே! .

எம்பிராட்டியினுடைய திருவாய்மொழியையும் திரு மேனி மணத்தையும் வண்ணத்தையும் தியானம் செய்கிருர் ஆசிரியர். பண்களையெல்லாம் உண்டாக்கும் மொழி என்றும் அவற்றைப் பாதுகாக்கும் மொழி என்றும் சொல்ல லாம். அம்பிகையின் திருவுருவத் தியானத்தில் ஈடுபட்ட வர்களுக்கு இந்தச் சொல்லாகிய ஒலியும், இந்தப் பரிமள மாகிய மணமும், இந்தத் திருமேனிச் சோதியும் புலகுைம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/159&oldid=546315" இலிருந்து மீள்விக்கப்பட்டது