166 எழில் உதயம்
மக்கள் முதலில் திருமணம் செய்துகொண்டு அப்பால்
இணைவார்கள். இங்கே மாருண முறையில் ஒரு நிகழ்ச்சி நிகழ்கிறது. முதலில் ஒன்முக இருந்தவர்கள் பிறகு பாதி
பாதியாகத் தோற்றினர்கள். அப்போது வவ்விய பாகத் தையுடைய இறைவரும் அம்பிகையும் இணைந்த செவ்வி யைக் காணுகிருேம். பின்னல் அவ்விருவரும் வேறு பிரிந்து திருமணம் செய்து கொள்கிருர்கள். இது உலகப் படைப்புக் காக எம்பெருமாட்டி செய்கிற நாடகம். -
ஒரு பெண்மணி கன்னியாக வீட்டுக்குள்ளே மறைந்து நின்ருள். பின்பு வீட்டு வாசலுக்கு வந்து தலையை மட்டும் காட்டினள். கல்யாணம் ஆயிற்று. வெளியிலே கணவனுடன் வரலாஞள். இதுபோலவே அம்பிகை சக்தனிடத்தில் சக்தியாக மறைந்து ஒன்றி நின்ருள். அப்பால் பாதி
தன்னைக் காட்டிக் கொண்டாள். பிறகு வேருக நின்று. அவனைக் கைப்பிடித்துக் குடும்ப நிர்வாகத்தை மேற்.
கொண்டாள்.
முதலில், வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந் திருக்கும் செவ்வி"யைக் காட்ட வேண்டும் என்ருர். அப்பால், 'உங்கள் திருமணக் கோலம் என்முன் வர வேண்டும்', என்கிருர், 證
அம்பிகையின் திருவடிப் போதைத் தம் உள்ளப் பொய்கையில் மலரச் செய்தவர் இந்த ஆசிரியர். நான் என்ற அகந்தையைப் போக்கியவர். அம்பிகையின் தியானம் உள்ள இடத்தில் அகந்தை இராது. அகந்தை உள்ள இடத்தில் அவள் அருள் ஒளி இராது. -
"அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும்
தொழும்பர் உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே’’ என்று குமரகுருபர முனிவர் பாடுவார். எத்தனைதான் முயன்ருலும் நான் என்னும் அகங்காரமும் எனது
3