பக்கம்:எழில் உதயம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலனும் காலும் 167

என்னும் மமகாரமும் மக்கள் உள்ளத்திலிருந்து எளிதில் நீங்குவதில்லை.

'யான் என தென்னும் செருக்கறுப்பான் வாளுேர்க்

குயர்ந்த உலகம் புகும்.’’ என்ற குறளில், இந்த இரண்டும் அற்றவர்கள் முத்தி யின்பம் பெறுவார்கள் என்ற கருத்தைக் காண்கிருேம். நாம் இரவிலே போய்க் கதவைத் தட்டுகிருேம். 'யார்?' என்று உள்ளே இருப்பவர்கள் கேட்டால், நாம் பெயரைச் சொல்லாமலே, நான்' என்கிருேம். மறு படியும், யார்? என்று கேள்வி எழுந்தால், நான்தான்' என்று அழுத்திச் சொல்கிருேம், அகங்காரமே நானுகவும் தானகவும் வடிவெடுக்கிறது.

வேடிக்கையாக ஒரு கருத்தை இங்கே சொல்லலா மென்று எண்ணுகிறேன். நாம் உண்ணும் உணவில் குழம்பு என்றும் ரஸம் என்றும் இரண்டு வியஞ்சனங்கள் இருக்கின்றன. எல்லாம் சேர்ந்து குழம்பியது குழம்பு. குழம்பிற்கும் ரஸ்த்திற்கும் உள்ள முக்கியமான வேறுபாடு என்ன? குழம்பில் தான் இருக்கும்; ரஸ்த்தில் அது இல்லை. ஆன்மிக வாழ்விலும் இப்படி ஒன்று உண்டு. தான் இருந்தால் குழப்பம் அல்லது குழம்பு உண்டு; மனம் ஐயத்திலே சிக்கிக் குழம்பும். தான் இல்லாவிட்டால் ரஸ்ம் தோன்றும். -

அகந்தை ஒழிந்தால் இன்பம் பெறலாம். அதை எப்படி ஒழிப்பது? தெய்வத்தைத் தியானம் செய்வதனல் அதனை ஒழிக்கலாம். அபிராமியின் திருவடியை எண்ணி எண்ணி இந்த அகந்தையினின்றும் நீங்கியவர் ஆசிரியர். அந்த அநுபவத்தைச் சொல்கிரு.ர்.

அவ்வியம் தீர்த்து என்ன ஆண்ட பொற்பாதமும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/175&oldid=546331" இலிருந்து மீள்விக்கப்பட்டது