ஆனந்த வெள்ளம் 177
அவயவங்களையுடைய வடிவத்திலும், பூரீசக்கரம் முதலிய யந்திரங்களிலும், மந்திரங்களிலும் அவள் உறைந்து அன்பர்களுக்கு அருள் செய்கிருள். அம்பிகையின் அன்பர்கள் சக்கரபூஜை செய்யும் பழக்கமுள்ளவர்கள், அம்பிகையின் பல பல நிலைகளுக்கு ஏற்றபடி பல பல யந்திரங்கள் உண்டு. அவற்றில் ஒன்று நவகோண சக்கரம், வீற்றிருப்பாள். நவ கோணத்திலே’ என்று வராகி மாலை பாடுகிறது. அபிராமி பட்டர் இந்தச் சக்கரத்தைக் குறிக்கிரு.ர். தேஜோமயமான ஒன்பது கோணங்களுடைய சக்கரத்தில் ஆவாகனம் பண்ணி வழிபடுபவர்களுக்கு நலம் வழங்குபவள் எம்பெருமாட்டி.
ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.
பூரீ சக்கரத்தில் உள்ள ஒன்பது ஆவரணங்களையே ஒன்பது கோணமாகக் கொண்டு, ஒவ்வோர் ஆவரணமாகிய சக்கரத்திலும் இலங்குபவள் தேவி. இங்கே கோணம் என்பது ஆகுபெயராகக் கோணங்களேயுடைய சக்கரத்தைக்குறித்த தாகக் கொள்ள வேண்டும்.
சகுண உபாசனையினல் தியானம் முறுகிவரும் என்பதை அறிந்த பெரியவர்கள் காட்டிய வழிகளில் உருவ வழிபாடும் யந்திர பூஜையும் முக்கியமானவை. அந்த இரண்டிலும் ஈடுபட்டவர் அபிராமிபட்டர். ஆதலின் இங்கே அந்த இரண்டையும் சொன்னர்.
வெளிகின்ற கின்திரு மேனியைப் பார்த்துஎன் விழியும்நெஞ்சும் களிரின்ற வெள்ளம் கரைகண்ட தில்லை; கருத்தினுள்ளே தெளிகின்ற ஞானம் திகழ்கின்றது:
என்ன திருவுளமோ? ஒளிகின்ற கோணங்கள் ஒன்பதும்
மேவி உறைபவளே!
எழில்-12,