பக்கம்:எழில் உதயம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரமர் மேனிக் கணபதி 13.

(மாலையாக அமைந்த கொன்றையையும் சண்பகமலர் மாலையையும் முறையே அணிந்த தில்லைப்பதியில் உள்ள பிராளுகிய நடராஜருக்கும், அவர்தம் பாகத்தில் எழுந் தருளிய உமாதேவிக்கும் உரிய மைந்தனே, மேகம்போன்ற, கரிய திருமேனியை உடைய கணபதியே, உலகங்கள் ஏழை யும் பெற்ற சிறப்பையுடைய அபிராமியம்மைக்கு அணி யும் அந்தாதி எப்போதும் என் உள்ளத்துள்ளே நிற்கும்படி யாக உரைத் தருள்வாயாக.

தார்-மார்பில் அணியும் மாலை. அமர்தல்-பொருந்தி விளங்குதல். கொன்றை. சிவபிரானுடைய அடையாள மாலை. தாரமர் கொன்றை சாத்தும் தில்லையூரர் என்றும், சண்பகமாலை சாத்தும் உமையென்றும் நிரல்நிறையாகக் கூட்டிப் பொருள்கொள்ளவேண்டும். சாத்துதல்-அணிதல். எல்லாப் பிரபஞ்சங்களும் அம்பிகையிலிருந்து தோன்றிய மையின், உலகேழும் பெற்ற சீர் அபிராமி என்ருர். எப். போதும் என்றது இடைவிடாமல் என்ற பொருள் உடை யது. சிந்தையுள்ளே அபிராமி அந்தாதிக்குரிய சொல் வளமும் பொருள் வளமும் உண்டாகவேண்டும் என்பதே: கருத்து. கட்டுரைத்தல்-அடைவாகச் சொல்லுதல்.) -

பூமாலை சாத்தும் பிராட்டிக்குப் பாமாலை சாத்தப் புகுகிறேன் என்ற நினைவில் முதலில் பூமாலையைச் சொன் ஞர். சர்வலோக ஜனனியாகிய அம்பிகையை வணங்கும். உரிமை யாவருக்கும் உண்டு. ஆதலின், ! 'உலகேழும், பெற்ற சீர் அபிராமி என்று கூறினர். முதல் உரிமை; உனக்குத்தான்; பின் உரிமையே எளியேங்களுக்கு' என்று: உரைப்பாரைப்போல முத்லில் உமை மைத்தனே என்: வர், 'உலகேழும் பெற்றமை யைப் பின்பு கூறினர் தில்லையும், கடவூரும் மட்டும் அப்பெருமாட்டிக், உரியவை அல்ல, உலகம் ஏழுமே அவளுக்கு உரியன என். கருத்தும் இதில் குறிப்பாக உள்ளது. அந்தாதி பாடு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/21&oldid=546178" இலிருந்து மீள்விக்கப்பட்டது