210 எழில் உதயம்
உள்ளத்தே தியானப் பொருளாகப் புகுகிருள். அதன் பயனே அன்பர்கள் நுகர்கிருர்கள். வெளியிலே நின்ருல் காற்றின் சுகத்தைப் பெருதவர்கள் நுழை வாயிலில் நின்று அதன் வேகத்தினுல் இன்பம் பெறுவதுபோல, தியான மூர்த்தி யில்ை இன்பம் பெறுகிருர்கள் உபாசகர்கள்.
அந்த இன்பத்தை அபிராமிபட்டர் சொல்ல வருகிருர், எப்படிச் சொல்வது? அம்பிகையைத் தியானம் பண்ணினல் பழைய உணர்வே மாறிவிடுகிறது. உலக எண்ணம் மங்கிப் போகிறது. மதோன்மத்தமான நிலை உண்டாகிறது. கள்ளைக் குடித்தவன் பழைய நிலையை மறந்து நிற்பதுபோலே ஒரு வகைப் போதையிலே நின்று தடுமாறும் உணர்ச்சி அமைகிறது. அம்பிகையை உள்ளத்தே தியானிப்பதனல் இந்த இன்பம் விளைகிறது. உள்ளே விளைந்த) ஆனந்தத் தேளுக, அமுதக் கள்ளாக அவள் இருக்கிருள். உள்ளத்தே விளைந்த கள்ளே! இந்தக் கள்ளை உண்ட தல்ை ஒரு விதமான இன்ப மயக்கம் ஏற்படுகிறது. கள்ளைக் குடிப்பதனால் உண்டாகும் மயக்கத்துக்குக் களி என்று பெயர். இந்தக் கள்ளால் உண்டாகும் ஆனந்த அநுபவமும் ஒருவகைக் களியே ஆகும். அம்பிகையே ஆனந்த உருவாக இருக்கிறவள் அல்லவா? -
களிக்கும் களியே! இவ்வாறே அம்பிகையின் தியானத்திஞல் விளையும் பேரானந்த நிலையைக் குமரகுருபரர் மீளுட்சியம்மை பிள்ளைத் தமிழில் பாடுகிரு.ர். -
'உருகி உருகி நெக்கு நெக்குள்
உடைந்து கசிந்திட் டசும்பூறும் உழுவ லன்பிற் பழவடியார்
உள்ளத் தடத்தில் ஊற்றெடுத்துப்