216 எழில் உதயம்
- "இழையணி சிறப்பிற் பழையோள்' என்று திருமுருகாற்றுப்படையும், 'நீல மேனி வாலிழை”
என்று ஐங்குறுநூறும் அம்மையைப் போற்றுகின்றன வாலிழை என்றது, மக்களால் இயற்றப்படாமல் அமைந்த தெய்விக அணிகலன்களை, ஏனைய மகளிர் தம்முடைய அழகை மிகுவிக்க அணிகளைப் புனைந்து கொள்வர். அன்னையோ இயல்பாகவே பேரழகு உடையவள். அவள் திரிபுரசுந்தரி.
'அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்வி’ என்று பாடுவார், இவ்வாசிரியர். எம்பிராட்டிக்கு அணி களால் அழகு அமைய வேண்டும் என்பது இல்லை. அதற்கு மாருக அன்னையின் திருமேனியினல் அணிகள் அழகு பெறுகின்றன. ஆதலின்,
அணியும் அணிக்கு அழகே! என்று பாடினர். -
இதுகாறும் சொன்ன நயப்பாடுகளெல்லாம் அபிராமி அம்மையின் திருவருளுக்கு ஏங்கி நிற்கும் அன்பர்கள் அநுபவத்தில் அறியும் தன்மையன. அன்னை பலருக்கும் பொதுவான தாயாக இருந்தாலும் அவளை அணுகி அன்பு செய்வாருக்குத் தன்னுடைய இனிய கோலத்தைக் காட்டி அருள் புரிகிருள். தன்னுடைய இனிய கல்யாண குணங்களை நினைக்கச் செய்து மனத்தில் சாந்தத்தை உண்டாக்குகிருள். அவள் உலகிலுள்ள ஆருயிர்க் கூட்டங் களெல்லாம் தன்னை அடைந்து நலம் பெறவேண்டும் --- பெருங்கருணை உடையவள். அதன் பொருட்டே வர் றினும் நுண்ணிய பொருளாக இருக்கும் ருடைய உள்ளம் கொள்ளும் வகையில்