பக்கம்:எழில் உதயம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் உறவு 225

"அன்பர்பணி செய்ய என ஆளாக்கி விட்டுவிட்டால்

இன்பநிலை தானே வந் தெய்தும் பராபரமே” என்று தாயுமானவர் பாடுகிருர் இன்பநிலையை நான் தேடிப் போகவேண்டிய அவசியம் இல்லை; அதுவே என்னை நாடிக்கொண்டு வருவதற்கு ஒரு வழி உண்டு. அந்த வழிதான் அடியார் கூட்டத்தில் சேர்ந்து அவர்களுக்குப் பணி புரிதல். அடியார்க்கு அடியான் ஆகும் ஆற்றவை நீ எனக்கு அருள் செய்தாயானல் அதுவே போதும்; அதன் வழியே நான் இன்பநிலை பெறுவேன்’ என்று நினைத்துப் பாடியது இது.

அடியாருடன் ஒன்றி வாழ்வதன் சிறப்பை உணர்ந்தே சுந்தரமூர்த்தி நாயனர் திருத்தொண்டத் தொகை என்ற திருப்பதிகத்தைப் பாடியருளினர். "அடியார் நடுவுள் இருக்கின்ற அருளேப் புரியாய் பொன்னம்பலத்தெம், முடியா முதலே' என்று மணிவாசகர் இறைவனை வேண்டிக் கொண்டார். .

வீதியில் பெருங்கூட்டம் போகிறது. ஊரில் பெரிய திருவிழா. யாவரும் கோயிலை நோக்கிப் போய்க்கொண் டிருக்கிருர்கள். ஓர் இளைஞன் தன் வீட்டு வாசலில் வந்து பார்க்கிருன் கூட்டம் கோயிலை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. அவனுக்குச் சோம்பலாக இருக்கிறது. மனத்துக்குள் போகலாம் என்ற விருப்பம் சிறிது தோன்றிலுைம் உடம்பு வணங்கமாட்டேன் என்கிறது. ஆனலும் வாசலில் நின்றவன் மெல்ல வீதிக்கு வருகிருன். எப்படியோ கூட்டத்தின் நடுவில் அகப்பட்டுக் கொள்கிருன். அப்புறம் அந்தக் கூட்டமே அவனை உந்தித் தள்ளிக்கொண்டு போகிறது. எப்படியோ கோயிலை அடைந்து விடுகிருன். இது உடம்பைப் பொறுத்தவரையில் நிகழும் நிகழ்ச்சி.

எழில்-15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/233&oldid=546388" இலிருந்து மீள்விக்கப்பட்டது