பக்கம்:எழில் உதயம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 எழில் உதயம்

|முதற் கடவுளராகிய திரிமூர்த்திகளுக்கும் தாயே, உலகத்து உயிர்களின் நன்மையின் பொருட்டு அபிராமி என்று போற்றப்பெற்று வரும்அரிய மருந்து போன்றவளே, உன்னை யான் என்றும் மறவாமல் நிலையாக நின்று துதிப்பேன்; இனி எனக்கு என்ன கவலை?(இப்பேறு கிடைத்த தற்குக் காரணம் என்ன?) நின் அடியவரின் பின்னே அவருக்கு ஆளாகத் திரிந்து, அவர்களைப் போற்றிப் பிறப்பை அறுப்பதற்குத் தக்கபடி, முன் பிறவிகளில் தவத்தைச் செய்திருக்கிறேன்.

அடியாரைப் பின்னே திரிந்து பேணி என்று கூட்டுக. உலகுக்கு-உலகின் நன்மைக்காக.)

இது அபிராமி அந்தாதியில் உள்ள 25ஆவது பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/240&oldid=546395" இலிருந்து மீள்விக்கப்பட்டது