பக்கம்:எழில் உதயம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகல் அடைந்தேன்

தி ரிபுர சுந்தரியே துணையும், தொழும் தெய்வமும், சுருதிகளின் பணையும், கொழுந்தும், வேரும் என்று அறிந்த தாகச் சொன்ன அபிராமி பட்டர், அந்த அறிவால் பயன் பெற்றதை அடுத்த பாட்டில் சொல்ல வருகிரு.ர்.

மனிதன் தன் வாழ்வில் எத்தனையோ விஷயங்களேத் தெரிந்துகொள்கிருன். சின்னஞ்சிறு குழந்தைப் பிராயம் முதற்கொண்டே, அது என்ன? இது என்ன?’ என்று. கேட்டுக் கேட்டுப் பலவற்றை அறிந்துகொள்கிருன். அவன் கேட்கும் கேள்விகளும், அறியும் பொருள்களும் அவசிய மானவையா என்பதை ஆராய்ந்தால், வேண்டாத வற்றையே மிகுதியாக அவன் தெரிந்து கொள்கிருன் என்பது தெரியவரும். புத்தி என்னும் அறையில் அழுக்கான பண்டங்களேயெல்லாம் அடைத்துக்கொள்வதல்ை புத்தியும் அழுக்காகிறது; வாழ்வும் அழுக்காகிறது. எதை அறிய வேண்டுமோ அதை அறிய வேண்டும். நாம் எத்தனை பொருள்களைக் கண்டாலும் கண்ட காட்சியளவிலே நின்று விடாமல் மேலும் ஆராய்ந்து மெய்ப்பொருள் இன்ன தென்று தெரிந்து கொள்ள வேண்டும்; அதுதான் உண்மை யறிவு.

“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு:

என்பது திருக்குறள். -

அம்பிகையின் திருவருள் இருந்தால் அறிய வேண்டிய வற்றை அறியும் திறம் வரும். இல்லையானல், பைத்தியக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/51&oldid=546208" இலிருந்து மீள்விக்கப்பட்டது