பக்கம்:எழில் உதயம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளத்தில் வா 55

ஆசிரியர்; ‘சிவபெருமாளுேடு வந்து பொருந்துக' என்கிருர், எந்தக் காலத்தும் சிவத்தினின்றும் பிரிவின்றி நிற்கும் உன்னைத் தனிய்ே அழைத்தல் தகுதியன்று. அப்படித் தனியே நீ வந்தால் பிரிவு பொருமல் எந்தச் சமயத்திலும் போய்விடக்கூடும். ஆகையால், உன் துனே வருடனே வந்து என் நெஞ்சத்தையே திருக்கட்டிலாகக் கொண்டு வீற்றிருந்தருள வேண்டும்' என்று இரந்து வேண்டுகிரு.ர்.

புனிதரும் நீயும் என் புந்தி எந்

காளும் பொருந்துகவே. சிவபெருமாளுகிய துணைவரை நினைக்கிரு.ர். அம்பிகை யின் திருவடியை எண்ணியவர், சிவபெருமானுடைய திரு முடியைப் பாடுகிருர். அவர் தம் திருமுடியில் கொன்றை மலரையும் சந்திரனையும் பாம்பையும் கங்கையையும் வைத்திருக்கிரு.ர். நெடுஞ்சடையின் மேல் இவற்றைக் கொண்ட புனிதராக அவர் விளங்குகிரு.ர்.

கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த புனிதர்.

கொன்றை சிவபெருமானுடைய அடையாள மாலை. விநாயகர் காப்பிலே, தாரமர் கொன்றையும்’ என்று சொன்ஞர் அல்லவா? அது பிரணவம் போன்ற வடிவுடை மையால் பிரணவ மலர் என்று பெயர் பெறும். பொன் னிறம் பெற்ற அதனை இறைவன் திருமுடியில் கண்ணி யாகவும் திருமார்பில் மாலையாகவும் அணிந்திருக்கிருன், தன்னுடைய வார்சடைமேல் திங்களை வைத்திருக்கிருன். சந்திரனுக்கு ஹிமகரன் என்பது ஒரு பெயர். அதனல் பனிதரும் திங்கள் என்ருர். சந்திரன் இறைவனுடைய திருமுடியின்மேல் தங்கியதல்ை பாவம் நீங்கிப் புனிதம் அடைந்தான். தேயாமல் வளராமல் எப்போதும் பிறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/63&oldid=546220" இலிருந்து மீள்விக்கப்பட்டது