பக்கம்:எழில் உதயம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளத்தில் 6)յ IT՝ 57

மனிதரும் தேவரும் மாயா

முனிவரும் வந்துசென்னி குனிதரும் சேவடிக் கோமள

மே. கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதி யும்படைத்த புனிதரும் யுேம்என் புந்தினங்

நாளும் பொருந்துகவே. - (மனிதர்களும் தேவர்களும் இறவாத முனிவர்களும் அணுகிவந்து தம் தலையை வணங்கி வழிபடும் செம்மையான திருவடிகளையுட்ைய, அகமும் புறமும் மென்மையான அம்மையே, கொன்றை மலரை அணிந்த நீண்ட சடையின் மேல் பணியை உண்டாக்கும் சந்திரனேயும், பாம்பையும், கங்கையையும் வைத்த தூயவராகிய சிவபெருமானும் நீயும் என் உள்ளத்தே வந்து எந்த நாளிலும் இணைந்து எழுந் தருளிiராக.

மாயா-மரணம் இல்லாத, குனிதரும்-வளைந்து பணியும் வார் சடை-நீண்ட சடை. பனி-குளிர்ச்சியுமாம். பகீரதி: பாகீரதி என்பது குறைந்து நின்றது; தமிழ் முடி பென்று கொள்ளுதலும் ஆம். படைத்த-கொண்ட புனிதர்-துரய்மை உடையவர். புந்தி-புத்தி; இங்கே உள்ளத்தைக் குறித்தது. பொருந்துக-வந்து அமைந்து எழுந்தருளவேண்டும்.) -

இறைவியுடைய திருவடியை ஊடல் நீக்கும் பொருட்டு இறைவர் வணங்கித் தம் திருமுடிமேற் கொள்வதாகச் சொல்வது மரபு. “சரணுவிந்தம்...எம்பிரான் முடிக் கண்ணியதே' (11) என்று அபிராமிபட்டரே கூறுவர். ஆதலின் இறைவியின் திருவடியை நினைத்தவுடன் அதிற் படியும் சிவபிரான் திருமுடியையும் நினைத்தார் என்று பொருத்தம் காட்டலாம். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/65&oldid=546222" இலிருந்து மீள்விக்கப்பட்டது