பக்கம்:எழில் உதயம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 எழில் உதயம்

அம்பிகையின் ஆகமங்கள் யாமளம் முதலிய பல வாகும். அறுபத்து நான்கு ஆகமங்கள் ஒன்று ஒரு கணக்கு உண்டு. சதுஷ்ஷஷ்ட்யா தந்த்ரை' என்று செளந்தர்ய லகரி கூறுகிறது. மற்ற ஆகமங்களைவிட அம்பிகையின் தந்திர சாத்திரங்கள் மேலானவையாதலின் அவற்றைப் பரமாகமம் என்ருர்.

- 来源 ::

அம்பிகையின் திருவடித் தாமரையைச் சென்னியிலே வைத்துக் காயத்தால் ஆகும் வழிபாட்டைச் செய்தார்; அவள் திருமந்திரத்தைச் சிந்தையுள்ளே மன்னச் செய்து மனத்தால் ஆகும் வழிபாட்டைச் செய்தார்; அவள் அடியாருடன் கூடிப் பரமாகம பத்ததியைப் பன்னி வாக் காலாகும் வழிபாட்டைச் செய்தார். இப்படி மனே வாக்குக் காயங்களாகிய முக்காரணங்களாலும் வழிபாடு புரிந்தார் அபிராமிபட்டர்.

சென்னிய துன்பொற் றிருவடித் தாமரை, சிந்தையுள்ளே மன்னிய துன்திரு மந்திரம்;

சிந்துர வண்ணப்பெண்ணே! முன்னிய கின்அடி யாருடன்

கூடி முறைமுறையே பன்னிய தென்றும்உன் றன்பர

மாகம பத்ததியே. (சிந்துாரத்தைப் போன்ற செவ்வண்ணத் திருமேனி படைத்த இளம் உருவத்தில் எழுந்தருளியிருக்கும் தாயே, அடியேனுடைய தலையின்மேல் இருப்பது உன்னுடைய பொலிவுபெற்ற அழகிய பாதமாகிய தாமரை மலர்; அடியேனுடைய மனத்திலே என்றும் நிலையாக இருப்பது உன்னுடைய தெய்வத்தன்மை பொருந்திய மந்திரம்; உன்னையே தியானித்து வாழும் அடியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/78&oldid=546235" இலிருந்து மீள்விக்கப்பட்டது