பக்கம்:எழில் உதயம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘78 எழில் உதயம்

கமலாலயனும் மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும் துதியுறு சேவடியாய்!

அவளுடைய அடியின் புகழைச் சொல்லும்போது அதைப் பணியும் மூவரையும் பற்றிச் சொல்ல நேர்கிறது. அவளுடைய அடியார்களாக அம்மூவரும் இருக்கிறவர்கள் அல்லவா? - -

அடி முடியை நாடித் தியானிக்கும் ஆசிரியர் அடியைச் சொன்னவுடன் அம்பி கையின் திருமுகத்தைத் தியானிக்கிரு.ர். அங்கேயுள்ள வண்ணத் திலகத்தை எண்ணுகிருர், எம்பெருமாட்டி தன் திருநுதலில் சித்துரத் திலகத்தைப் புனைந்திருக்கிருள். அந்தச் சிந்துரானனத்தைப் பாடுகிருர். சிந்துார திலகாஞ்சிதா' (632) என்பது லலிதா சகசிரகாமம். .

சிவந்த அடியையும் செவ்வண்ணத் திலகம் அணிந்த நுதலையும் உடைய பிராட்டியின் திருமேனி முழுவதும் அழகு வெள்ளம் அலே புரண்டோடுகிறது. அதற்கு ஒரு கரை அடியானல் மறு கரை ஆணனம். இரு கரையும் கண்டு இடைப்பட்ட வெள்ளத்தை அளவிடமாட்டாமல், "அழகு வெள்ளமே!’ என்று வியப்பில் மூழ்கிச் சுந்தரியே என்று வாயாரச் சொல்லிப் பாட்டை நிறைவு பண்ணுகிரு.ர்.

சிந்துரானன சுந்தரியே!

விந்துாரம் என்பது தமிழில் சிந்துரம் என்று வரும். *சிந்துார திலகுத்தையுடைய நெற்றியையுடைய அழகியே!” என்று புகழ்கிருர், ... ?

பிரபஞ்ச அநுபவமாகிய தயிரிலே கிடந்து சுழலும் மத்தாக இருக்கிறது உயிர். அதை எம்பெருமாட்டியின் செளந்தரியப் பெருங்கடலில் கரைத்துவிட எண்ணு கிறவர். போல, அதையும் சொல்லி அவள் அழகையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/86&oldid=546243" இலிருந்து மீள்விக்கப்பட்டது