பக்கம்:எழில் உதயம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88: எழில் உதயம்

திலே அன்புடன் நினைக்கிருன்; திருவிழியாலே பார்க்கிருன். இதை முதலில் ஆசிரியர்,

கருத்தன, எங்தைதன் கண்ணன என்கிரு.ர். இறைவனுடைய அருள் நோக்கம் மேவுகின்ற இந்த நிகழ்ச்சியைக் குமரகுருபரர் மீளுட்சியம்மை பிள்ளைத் தமிழில் பாடுகிருர்; -

- 'தார்கொண்ட மணிமுடி ஒருத்தன் திருக்கண்மலர்

சாத்தக் கிளர்ந்துபொங்கித் தவழுமிள வெயிலும்பழ நிலவுமள வளவலால்

தண்ணென்று வெச்சென்று பொன் வார்கொண் டணந்தமுலை மலைவல்லி’’ என்று அவர் வருணிக்கிரு.ர்.

உலகமெங்கும் பெற்ற தாயாகிய அம்பிகையின் நகில் கள் பெரிய உருவினை உடையன; மேருமலை போலப் பொலி வும் திரட்சியும் உடையன.

வண்ணக் கனக வெற்பிற் பெருத்தன.

முருகப் பெருமானுக்குப் பாலைக் கறந்து அருத்திய நகில்கள் அவை. இதனை உலகம் அறியாது. ஆனல் உலகம் அறிய அப்யெருமாட்டி அழுத பிள்ளை ஒருவனுக்குப் பாலே அளித்தாள். அழுதுலகை வாழ்வித்த கவுணியர் குலாதித்தனுக்கு, அம்மை பால் அளித்த செய்தி உலகம் அறிந்தது. -

பால் அழும் பிள்ளைக்கு நல்கின.

இத்தகைய திருத்தனபாரம் அருளே வடிவமானவை. இறைவியே அருள் வடிவமானவள். அவள் திருவுருவம் கருணைப் பரப்பானல் அருள் ஊற்றெழும் வாயி ல் அந்த நகில்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/96&oldid=546253" இலிருந்து மீள்விக்கப்பட்டது