பக்கம்:எழில் விருத்தம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் 99 நகரமன்றத் தலைவர் மறைந்த இரத்தினவேலுப் பிள்ளை எனக்கு வாங்கிக் தந்தார். நான் முதலில் ஆசிரியர் பணியைத் தொடங்கியது உழவர் கரை பேட்டில் ஆகும். அப்பொழுது எனக்கு ஊதியம் 25 ரூபாய். அன்றைய விலைவாசியில் அதிலேயே மாதம் ரூபாய் பத்து மிச்சம் பிடிக்கலாம். நினைத்துப் பார்க்கி ன் அன்றைய விலைகளுக்கு இன்றைய விலைகள் தாறுமாறாய் ஏறியுள்ளன. ஒன்பது மாதத்திற்குப் பின் அதாவது 24-9-1937 இல் நுழைவுத் தேர்வு (Concours) வந்தது. அந்நாட்களில் இன்று போன்று பத்துத் திங்கள் B1. பயிற்சியோ இரண்டாண்டுகள் ஆசிரியப் பயிற்சியோ இல்லை. இரண்டாண்டுகள் ஆசிரியர்கள் வகுப்பு நடத்தி முடிப்பதோடு எழுத்து, வாய்மொழித் தேர்வு மற்றும் அரை நாள் வகுப்பு மேற்பார்வைக்குப் பின்னரே 3ாக்குச் சமமான C.A.F. தேர்வில் வெற்றிபெற வேண்டும். அதன் பின்னரே ஊதிய உயர்வுகள் கிடைக்கும். அப்பொழுதெல்லாம் ஆசிரியர் பயிற்சிக்குத் துணை புரியும் தமிழ் நூல்களே கிடையாது. பிரெஞ்சு நூல்களைக் கற்றே தமிழில் விடை எழுத வேண்டும். இந்த C.A.F. ஆசிரியப் பயிற்சித் தேர்வில் 1940ஆம் ஆண்டு வெற்றி பெற்றேன். பல ஊர்களுக்கு மாற்றலாகி என் ஆசிரியப் பணி நடந்து கொண்டே இருந்தது. இந்த நாட்களில்தான் கவிதை எழுத வேண்டும் என்ற உணர்வும் தமிழ் இலக்கியங்களைப் பயில வேண்டும் என்ற துடிப்பும் ஏற்பட்டது. - - * எனக்கென்னவோ பாரதிதாசன் நூல்களில்தான் தனிவெறி. அவரது நூல்களைப் பலமுறை திரும்பத் திரும்பப் படித்து மகிழ்வேன்.அவரைப்போல எளிய நடையில் இனிய பாடல்கள் எழுத வேண்டுமென்ற