பக்கம்:எழில் விருத்தம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் | ()3 கொள்கிறோமே என்ற பயம் எனக்கு ஏற்பட்டதேயில்லை. துணிவோடு கலந்து கொள்வேன். இரவில் காரைத் தமிழன் பர்களும் நானும் தொல் காப்பிய அறிவைப் பகிர்ந்து கொள்வோம். பலர் என் சொற்பொழிவைப் பாராட்டினர். என் போல் பணிபுரிந்த தமிழாசிரியர் சிலர் இவரென்ன தமிழில் பெரிய பட்டதாரியா? எங்களைப் போல் B.I. தானே என்று குறை கூறியதுண்டு. தமிழ்ப்பட்டதாரி வித்வானுக்குரிய தமிழறிவை நான் வளர்த்துக் கொண்டிருந்ததென்னவோ உண்மை, ஆனால் அவர்கள் கூறுவது போல் வித்துவான் பட்டம் நான் பெறவில்லையே என்ற ஏக்கம் என்னை உறுத்திக் கொண்டேயிருந்தது. . பல ஏடுகளுக்கும் நான் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தாலும் காஞ்சியிலிருந்து அறிஞர் அண்ணாவால் நடத்தப்பட்ட திராவிட நாடு இதழுக்கு எழுத வேண்டு மென்ற எண்ணம் காரைக்காலில் பணிபுரியும் போது தான் ஏற்பட்டது. "விதைக்கொரு செய்தி" என்ற தலைப்பில் நான்கு வெண்பாக்கள் எழுதி 'திராவிட நாடு இதழுக்கு அனுப்பியிருந்தேன். அன்றிருந்த நிலையில் என்பாடல் வெளியிடப்படுமோ என்னவோ என்ற அய்யமே என்னுள் இருந்தது. ஆனால் என்பாடல் உடனே திராவிட நாடு முகப்பட்டையில் வெளிவந்திருந்தது. அண்ணாவின் பாராட்டும் தொடர்ந்து எழுதுமாறு கடிதமும் வந்தன. நினைத்துப் பார்க்கின் நான் அன்றடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தொடர்ந்து திராவிட நாடு, விடுதலை, புதுக்கோட்டையிலிருந்து வெளி வந்த பொன்னி முதலிய ஏடுகளுக்கு எழுதிக் கொண்டிருந்தேன்.