பக்கம்:எழில் விருத்தம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{) - வாணிதாசன் நம்முடைய கவிஞர் இயற்கை அன்னையின் மடியில் மறைந்திருக்கும் அரிய பொருள்களின் சீரையும் சிறப்பையும் நம் மனக் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துவதில் வல்லவராக விளங்குகிறார். இரண்டோர் எடுத்துக்காட்டுக்களைப் பார்ப்போம்: - "உண்ணத் தெவிட்டா இயற்கை ஒவியப் பேரெழில் சோலை!" - 6:3 "சொல்லில் வல்லவர் பேருரை நயம்போல் தொடர்ந்து வீழ்ச்சியாய் மாறினாய்’- 12:2 'பொன்பூத்த கருவானம் பொலிவற்றுப் போகும்' - 10:2 "பொங்கிச் சிறி அலையெழுப்பிப் போரைச் செய்யும் கடல்' - 2.5 கவிஞர் வாணிதாசன் இயற்கையை இயற்கை அழகின் இன்பத்திற்காகவே சிறப்பித்துப் பாடுவதோடு அமையாது, இயற்கை அழகை வாழ்க்கைப் போருக்குப் பயன்படுத்தியும் பாடியுள்ளார். இத்தகைய பாடல்களில் கலையழகு கவினுற்று விளங்குகிறது. அதனுடன் நிகழ்வியல் பாங்கும் (Realisam), இன்றைய வாழ்வியல் நிலையும் இணைந்தும் இழைந்தும் காணப்படுகின்றன. 'பாயும் செவ்வொளி மறைந்திட மறைந்திடு பகலவன் வழிநோக்கித் - தேயும் திங்களும் வழியினைக் கூட்டியே திரும்புவோர் செயல்போலச் சாயும் செங்கதிர் போய்விழ' - 4:8