பக்கம்:எழில் விருத்தம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் 1.9 ஆறே! அலைகட லுலகில் அழிவது பிறப்பதின் வித்தாம் என அமைத்துக் காட்டியுள்ளார். இஃது இயற்கையின் செயலையும் தத்துவ விளக்கத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. 'நீர்மையைத் தேக்கி நின்கரை புதுமையால் விளைந்த பொறியினை இயக்கி மின்விசை நல்கிப் புரந்தனை ஆறே என்னும் அடிகளில், தற்கால விஞ்ஞானப் புதுமையின் விளைவையும் தம் பாடலில் மிளிரச் செய்திருப்பதை அறிபவர் இவர் புதுமைக் கவிஞரே என்பதை நன்கு உணர்வர். 'விண்மீனி'ல் இந்நாளளவும் வேறெவரும் எடுத்துக் காட்டாத அளவுக்கு ஒப்புமைப் பொருளை மிக மிகப் பொருத்தமாக அமைத்துள்ள அழகைக் கண்டு மகிழலாம். - - . - - கதிரவன் வருகையால் தாமரையும், திங்கள் வருகையால் அல்லியும் மலர்வதாகப் புலவர்கள் பாடியுள்ளார்களே, அவ்வாறே விண்மீன்களின் தோற்றத்தினால் விரியும் பூக்களை விளம்பாததைக் கண்ட கவிஞர், அதனையும் ஆராய்ந்து பார்க்குமாறு அறிவுக்கு வேலை கொடுத்துள்ளார். தாவர ஆராய்ச்சியாளர்க்கு இஃதோர் நல்விருந்தாகும். நல்லுழவன் இன்றேல் வேலுயர்த்தி அரசாளும் எந்நாடும் என்றும் விடியாதே எனச் சொல்லி விடிய வரும் காலை என்பன போன்ற கருத் தோவியங்களைக் காலை’ப் பாடல்களில் கண்டு மகிழலாம். - .