பக்கம்:எழில் விருத்தம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுழல் விளக்கு கடலில் நீந்திச் செல்கின்ற கண்ணைக் கவரும் சிற்றுர்போல் கடலைத்தாண்டும் நாவாயைக் கண்டேன் ஒருநாள் சுழல்விளக்கே ! கடலைத் தாண்டும் நாவாயைக் கட்டி அனைத்துன் ஒளிமுத்தம் இடுதல் இன்றேல் கொடுங்கடலில் எதிர்ப்பை யார்தான் முறியடிப்பார்? 3 நிறைந்த படையைத் தன்னகத்தே நிறைத்துக் கொண்டே போர்க்காலம் மறைந்து மறைந்து கடல் வாழும் - - - மாற்றார் கப்பல் நீர்மூழ்கி உறையு மிடத்தைச் சுழல்விளக்கே! உன்கண் கண்டும் ஊரறிய அறையா திருந்தால் உன்னாட்டார் ஊமை என்றே அறையாரோ? 4 பொங்கிச் சீறி அலையெழுப்பிப் போரைச் செய்யும் கடலிடையில் தங்கித் தவித்து விழிபிதுங்கித் தடந்தோள் அறிவு துணையாகக் கங்குல் பகலில் கடல்எதிர்த்த . கப்ப லோட்டி செய்தியெலாம் எங்கட் கேனோ சுழல்விளக்கே ! இன்னும் சொல்லா திருக்கின்றாய்? 5