பக்கம்:எழில் விருத்தம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் 33 வீரமென்ற வெறியேற்றி விரியுலக மக்களிலே வெகுபேர் தம்மை ஈரமென்ற சொல்லுக்கே இடமின்றி எதிர்ப்போரை என்றும் வீழ்த்தும் காரமென்ற சொல்லுக்கே வெற்றியென்று கதையளந்து கட்டி வாழ்ந்த - துரமுள்ள மலைக்கோட்டை இன்றோபாழ்! தாயகத்தின் துக்கச் செய்தி ! 4 உழைப்பளித்த விளைவினிலே ஆறிலொன்றை உறுபொருளாய் உற்றான் மன்னன் - பிழைப்பளித்துப் படைதேக்கி நாடேய்த்த பெருமன்னர் - பெருங்கற் கோட்டை தழைப்பளித்து வாழ்ந்ததில்லை; தனிமனிதன் நல்வாழ்வு சரியும் என்றே அழைப்பளித்தே பாழடைந்த கோட்டைமதில் அறிவுறுத்தும் அணுகு வோர்க்கே !