பக்கம்:எழில் விருத்தம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வாணிதாசன் நினைவென்றே உனையொதுக்கி உன்னாட்டை ஆள்கின்றார் நினைவில் மக்கள்; நினைவிற்கே வரலாற்றுப் பெரும்புலவர் நீள்குறிப்பை நிலைக்கச் செய்தார்; நினைவில்லாத் தாயகத்தின் நிலையெண்ணா மக்கட்கே நித்தம் நித்தம் கனவாகிப் போனாயோ மலைக்கோட்டைக் கற்சுவரே! கருத்தை ஊட்டே! 10 “முதனான்கும் காயாகிப் பின்னவைமா தேமாவாய் முடியு மன்றே" என்னும் 'விருத்தப் பாவியல் நூற்பாவுக்கு ஏற்ப அமைந்த அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்.