பக்கம்:எழில் விருத்தம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வாணிதாசன் ஆலை மாடென மற்றவர் நலம்பெற அடிக்கடி நாடோறு - வேலை செய்திடு கூலிகள் ஏழையர் வியர்வையின் பரிசாக மாலை தந்திடு சிறுபொருள் வாங்கிடு மனத்தினில் தெளிவில்லாக் கூலி ஆட்களின் கொதிமனம் போலொளி குன்றிய குளிர்மாலை! 9 தெங்கு மாவினில் செவ்வொளி மங்கிடத் தெருவினில் நீர்தெளித்து மங்கை மெல்லியர் வாழ்மனை கூட்டியே மாவினார் கோலமிட்டுச் செங்கை ஏந்திய விளக்கினை நீள்கடைத் திண்ணையின் மேலேற்றிக் கங்குல் நீக்கிடு திங்களை வாழ்த்திடு கவின்மிகு கார்மாலை! 1 O 'குறிய ஈற்றுமாக் கூவிள முவவிளங் காயொடுங் குறிகொள்ளே’ என்னும் 'விருத்தப் பாவியல் நூற்பாவுக்குகேற்ப அமைந்த அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம். காயொடும் என்பது மாங்காய் என அறிக.