பக்கம்:எழில் விருத்தம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 6 வாணிதாசன் சுற்றிய முந்நீர் உலகினில் ஆறே தோன்றிய நாளெதோ அறியேன்! பெற்றவள் போலப் பேருல கெங்கும் பிறந்தநல் லுயிர்களுக் குணவாம் உற்றநன் னீரை ஊட்டினை; வாழி! உன்கரை தங்கினர் மக்கள்; கற்றனர் வாழ; இயலிசை கூத்தைக் கண்டனர்; அரசுகண் டாரே; 9 கொண்டலில் பிறந்து கொண்டலுக் குதவிக் குடிமுறை காத்தனை ஆறே பண்டைய புலவர் பண்பெலாம் பெற்றாய்! பாரினைத் திருத்தினை: வாழி! அண்டைய வாழ்வை அழித்தனை, ஆக்கி அரசுபோல் உலகினைக் காத்தாய்! எண்டிசை யுலகில் யாதுமே உன்போல் இளமையோ டிருப்பது முண்டோ? 10. "நால்விள மும்மா நடை பெறும்" என்னும் விருத்தப் பாவியல் நூற்பாவுக்கு ஏற்ப அமைந்த அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம். 2,4,7 ஆகிய இடங்களில் மாச்சீரும் பிறவற்றில் விள்ச்சீரும் வரும் என அறிக. - - - " .