பக்கம்:எழில் விருத்தம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயில் பெற்ற தாயினைக் கூண்டிடைக் கண்டிடு பேற்றை உற்ற னமெனும் பொய்மையில் மகிழ்ந்தனை, உண்மைச் சுற்ற மாரெனக் காக்கைகள் கூவியே துரத்தக் கற்ற னையவ ரவரினம் காப்பதே கடனாம்! 3 புள்ளி பெற்றனை ஓவியப் பொறியென வுடலில்; வெள்ளை மாமலர் மேவிய தேரையைப் போல் நீ கள்ள மற்றனை, காவினில் கூவிநீ குயிலே - உள்ள மீர்த்தனை உயிரையும் கொடியவர் உணவே . . . . 4. கூடு கட்டிடக் குடிசெயக் கற்றிடாக் குயிலே! பாடு பாவலர் பாவையர் பற்றுமிக் கூரக் காடு தாண்டியே காதலர் கண்டுவந் துரைக்க நாடு முற்றிலும் உன்துணை நாடினர் என்னாம் ? - 5